தீர்வு


 

தீர்வு- TNCT பைலட் திட்ட கருதுகோள்

வளரிளம் பள்ளி மாணவர்களுக்கு பகுத்தாராய்வு திறனைக் கற்பிப்பது, மோசமான தகவலைக் கண்டறிவதற்கும், தகவல்களின் நம்பகத்தன்மை மற்றும் துல்லியத்தினை மதிப்பிடுவதற்கும், பலவீனமான காரணங்களிலிருந்து வலுவான வாதங்களை வேறுபடுத்துவதற்கும், பல்வேறு தலைப்புகளில் மேம்பட்ட அறிவார்ந்த திறனை ஏற்படுத்தும். பகுத்தாராய்வு சிந்தனை (CT) என்பது தகவலை திறமையாக கருத்தாக்கம், பயன்படுத்துதல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் மதிப்பீடு செய்யும் நம்பிக்கை மற்றும் செயலுக்கான ஒரு வழிகாட்டிச் செயல்முறையாகும். அரசியல் சாசனத்தின் 51(A)(h) பிரிவின் படி அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், விசாரணை மற்றும் சீர்திருத்த உணர்வு ஆகியவற்றை வளர்ப்பதற்கான அறிவுசார் அடித்தளங்களை தூண்டுவதன் மூலம், பள்ளி மாணவர்களுக்கு பகுத்தாராய்வு திறன் கற்பிப்பது மூலம் தவறான தகவல், பொய் பிரகடனங்கள் மற்றும் ஆன்லைன் மோசடிகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான திறன்களை வளர்க்கும்.

Tamil