P. உதயா, இவர் ஒரு இளங்கலையில் விலங்கியல் (B.Sc.(Zoology)) பட்டதாரி. அவர் “ஒரு செயலை முதலில் கற்றுத் தருபவரை யாரும் வாழ்நாளில் எளிதில் மறப்பதில்லை. அப்படி ஒரு குழந்தைக்காவது ஞாபகத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த ஆசிரியர் பணியை தேர்ந்தெடுத்தேன் என்று கூறுகின்றார். குழந்தைகளின் எதிர்கால வாழ்விற்கு வழிகாட்டியாகவும் ஒரு நல்ல உந்துதலாகவும் இருக்க வேண்டும் என்று அன்றாடம் முயர்ச்சிக்கும் அவர் எப்பொழுதும் நேர்மையாகவும் பொறுமையாகவும் இருப்பது ஒரு ஆசிரியரின் பலம் என்றும் கருதுகின்றார். வீட்டு தோட்டப் பராமரிப்பு மற்றும் சமையல் செய்வது இவருக்கு பிடித்தமான பொழுதுபோக்குகள்.
